search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இறால் பண்ணையில் வாயு கசிவு- 28 பேர் பாதிப்பு
    X

    இறால் பண்ணையில் வாயு கசிவு- 28 பேர் பாதிப்பு

    • ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் கந்தபாடா பகுதியில் ஒரு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.
    • தொழிற்சாலை மயக்கம் அடைந்த 28 தொழிலாளர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

    பாலாசோர்:

    ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் கந்தபாடா பகுதியில் ஒரு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. நேற்று இரவு இங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அமோனியா வாயு கசிந்தது.

    இதை சுவாசித்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மயக்கம் அடைந்த 28 தொழிலாளர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×