என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
Byமாலை மலர்9 Jan 2022 12:26 PM GMT (Updated: 9 Jan 2022 12:26 PM GMT)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் மின்னல் வேகத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லியில் தலா 20 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை இந்தியாவில் உருவாகிவிட்ட நிலையில், அடுத்த மாதம் 2-வது வாரத்தில் உச்சத்தை தொடும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்குத்தான் பொது போக்குவரத்து அனுமதி என கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவ கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள் உடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்போது மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X