search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயிஷா சுல்தானா
    X
    ஆயிஷா சுல்தானா

    நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு போட்டது தவறு -பாஜக தலைவர்கள் ராஜினாமா

    ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என கேரள மந்திரி சிவன்குட்டி வலியுறுத்தி உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா படேல், அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் தவறான முடிவுகளை அமல்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சத்தீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

    காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்தும் லட்சத்தீவு அதிகாரிக்கு எதிராக புகார் கிளம்பியது. மத்திய அரசு லட்சத்தீவு அதிகாரியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல்

    இந்நிலையில், லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா, டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.


    ஆயிஷா சுல்தானாவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு "தவறானது மற்றும் நியாயமற்றது" என்று கூறி, லட்சத்தீவில் உள்ள பல பா.ஜனதா தலைவர்கள், பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் முல்லிபுழா தலைமையில் ராஜினாமா செய்து உள்ளனர்.

    ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என கேரள மந்திரி சிவன்குட்டி வலியுறுத்தி உள்ளார். 

    லட்சத்தீவு அரசாங்கத்தின் சர்வாதிகார மற்றும் பாசிச கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் பிரபலமான முகம் ஆயிஷா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×