Accident | பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து... 11 பேர் உயிரிழந்ததால் சோகம்

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தாமதமின்றி தொடங்கப்பட்டன.
Accident | பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து... 11 பேர் உயிரிழந்ததால் சோகம்
Published on

மிர்சாபூர் மாவட்டம், திராமண்ட்கஞ்ச் பகுதியில் புதன்கிழமை அன்று பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்த தகவல் இரவு சுமார் 8.30 மணியளவில் கிடைத்ததாக எஸ்.பி. அபர்ணா ரஜத் கௌஷிக் தெரிவித்தார். திரமண்டகஞ்ச் பள்ளத்தாக்கிலிருந்து லசோடா பகுதியை நோக்கி செல்லும் பாதையில், வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

பிரேக் செயலிழந்ததால், பின்னால் இருந்து வந்த ஒரு லாரி மற்றொரு லாரியின் மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மோதலின் போது இரண்டு லாரிகளுக்கு இடையில் ஒரு கார் சிக்கிக்கொண்டது. இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில், மற்றொரு வாகனமும் மோதப்பட்டு தீப்பிடித்தது என்று அவர் கூறினார்.

தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கௌஷிக் தெரிவித்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தாமதமின்றி தொடங்கப்பட்டன என்று அவர் கூறினார்.

"இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன," என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியில் உள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட பாதையில் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட லாரிகளில் ஒன்று பீகார் பதிவு எண்ணையும், மற்றொன்று மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

சம்பந்தப்பட்ட கார்களில் ஒன்று சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தது, மற்றொன்று மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com