டோனியின் அடுத்த திட்டம்.. ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி..

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர் டோனி, அங்கு கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ வீரர்களுடன் எம்எஸ் டோனி
ராணுவ வீரர்களுடன் எம்எஸ் டோனி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

டோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ  லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் டோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com