வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும்- அமைச்சர் நிலோபர் கபீல் வேண்டுகோள்

இஸ்லாமியர்களின் ‌ஷபே பராத் நாளில் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்று அமைச்சர் நிலோபர் கபீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் நிலோபர் கபீல்
அமைச்சர் நிலோபர் கபீல்
Published on

வேலூர்:

அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‌ஷபே பராத் முஸ்லிம்களுக்கு மிக முக்கிய நாளாகும். இந்த இரவு புனிதமான ஒன்றாகும். இந்த நாள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு (ஏப். 9, 10) நடுவில் வருகிறது.

இந்த இரவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆண்கள் வழக்கமாக மசூதிகளில் கூடி தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். பெண்கள் வீட்டிலேயே படிப்பது வழக்கம். இது முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு பண்டிகையாகும்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் அனைத்து மத வழிப்பட்டுத்தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தங்களது 5 வேளை தொழுகையை வீட்டுக்கு உள்ளேயே நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்.

அனைவருக்கும் ‌ஷபே பராத் தொழுகையை மசூதிகளில் நிறைவேற்ற ஆசை இருப்பது இயல்புதான். எனினும், நம்மில் யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியாது. பாதிப்பு ஏற்பட்ட நபரின் மூலமாக மற்றவர்களுக்கு எளிதாக பரவ வாய்ப்பு அதிகம். எனவே, ‌ஷபே பராத் தொழுகையை வீட்டுக்குள்ளேயே நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com