

மேலூர்:
மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதில் ஒரு தரப்பில் பாண்டி(வயது 65), பாலமுருகன்(33),சதீஸ்குமார்(28) ஆகியோரும், மற்றொரு தரப்பில் சரவணன்(26), ஐஸ்வர்யா(20) ஆகியோரும் காயமடைந்து மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.