குடிசை மாற்று வாரிய வீடுகள் நவீன வசதியுடன் கட்டித்தருவோம்- தமிழச்சி வாக்குறுதி

6 சட்டமன்றத்தொகுதிகளில் இருக்கும் குடிசை வாழ் மக்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று பிரசாரத்தில் தமிழச்சி வாக்குறுதி அளித்துள்ளார். #Loksabhaelections2019
குடிசை மாற்று வாரிய வீடுகள் நவீன வசதியுடன் கட்டித்தருவோம்- தமிழச்சி வாக்குறுதி
Published on

சென்னை:

தென்சென்னை பாராளுமன்றத்தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலை, போட் கிளப் ரோடு, நந்தனம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தார்.

எஸ்.எம்.நகர் மக்களிடையே பேசும்போது, “உங்களுடைய உற்சாகமான வரவேற்பு, மிகப்பெரிய நம்பிக்கையோடு என்னை பயணப்பட வைக்கும். மயிலாப்பூர் ஓட்டு எண்ணும் போது, உதயசூரியன் சின்னத்துக்கு தான் மிக அதிக அளவில் ஓட்டு விழுந்து இருக்கும் என்று நம்புகிறேன். மயிலாப்பூரில் இருக்கும் குடிசை மாற்று வாரிய வீடுகள் மிக மோசமானதாக இருக்கிறது என்று மக்கள் தெரிவித்தார்கள்.

மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமல்ல, தென் சென்னையில் இருக்கும் 6 சட்டமன்றத்தொகுதியிலும் இருக்கும் குடிசை வாழ் மக்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும். நான் பேராசிரியையாக பணியாற்றியவள், பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டேன், நம்பிக்கையோடு ஓட்டு போடுங்கள்” என்றார். தி.மு.க. பகுதி செயலாளர் வேலு உள்பட பலர் ஓட்டு கேட்டனர். #Loksabhaelections2019

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com