ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு நாள்: சோனியா- தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்களும், பொதுமக்களும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.#rajivgandhi #deathanniversary #leaderspayhomage
ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு நாள்: சோனியா- தலைவர்கள் அஞ்சலி
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பிரதமர் ஆன முதல் தலைவர் ஆவார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்
காங்கிரசின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com