பூரண மது விலக்கு கோரி குமரிஅனந்தன் உண்ணாவிரதம்

மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தீய வாதியுமான குமரிஅனந்தன் பூரண மது விலக்கை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். #KumariAnandan
பூரண மது விலக்கு கோரி குமரிஅனந்தன் உண்ணாவிரதம்
Published on

மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தீய வாதியுமான குமரிஅனந்தன் பூரண மது விலக்கை வலியுறுத்தி போராடி வருகிறார். இந்த கோரிக்கைக்காக ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தி தினத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அதன்படி இன்றும் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தார். முன்னதாக காந்தி, காமராஜர், சாஸ்திரி படங்களுக்கு மரியாதை செலுத்தினார். இதில் மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் மற்றும் மது விலக்குக்காக போராடும் தியாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com