

இதனால் அவர் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் கூறியதாவது:-
விராட்கோலி திறமையான பேட்ஸ்மேன். தன்னம்பிக்கை உள்ள வீரர். ஒரு பவுலராக நான் அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்புவேன். அவர் அதிக ரன் குவிக்கும் திசைகளை கண்டறிந்து அதை தடுக்க முயற்சிப்பேன். அவருக்கு சரியான திசையில் தான் பந்துவீச வேண்டும். ஷாட்பிட்ச் மற்றும் புல்டாசாக வீசினால் அடித்து நொறுக்கிவிடுவார். அவர் இயல்பாக ரன் குவிப்பதை தடுக்க அவரது எண்ணத்துடன் நான் விளையாடவே விரும்புவேன்.