கருணாநிதி மறைவுக்கு இரங்கல்- பேராவூரணியில் அமைதி ஊர்வலம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேராவூரணியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #karunanidhideath #dmk
கருணாநிதி மறைவுக்கு இரங்கல்- பேராவூரணியில் அமைதி ஊர்வலம்
Published on

பேராவூரணி:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலம் பேராவூரணி சேது ரோடு பயணியர் மாளிகையில் தொடங்கியது. பின்னர் அண்ணா சாலை, அறந்தாங்கி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று வேதாந்தம் அரங்கில் நிறைவுபெற்றது.

அதைத் தொடர்ந்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி வேலுச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசு, முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம், தி.க சார்பில் சிதம்பரம், இ.கம்யூனிஸ்ட் சார்பில் பாலசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கருப்பையா, விடுதலை சிறுத்தைகள் அரவிந்தகுமார், தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் கே.பி.குமணன், அல்லிராணி சேகர், முன்னாள் ஒன்றிய பொருப்பாளர் தங்கவேலு, பன்னீர், ஊராட்சி செயலர் குட்டியப்பன், கிளை கழக செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி சவுந்தர ராஜன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், அனைத்து கட்சியினர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருணா நிதி படத்துக்கு அஞ்சலி செலுத் தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com