கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை

சுயேச்சை எம்எல்ஏ-வை தகுதி நீக்கம் செய்த கையோடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளார் கர்நாடக சபாநாயகர்.
ரமேஷ் மகேஷ்
ரமேஷ் மகேஷ்
Published on

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததுதான். அத்துடன் சுயேச்சை எம்எல்ஏ சங்கரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார்.

தற்போது காபந்து முதல்வராக குமாரசாமி உள்ளார். பா.ஜனதா சார்பில் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார். முதலாவதாக சுயேச்சை எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கிகோலியையும், மகேஷ் குமதல்லி ஆகியோரை கட்சித்தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com