ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்ததாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீன பெண் விடுதலை

ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்ததற்காக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன பெண் அஹெத் தமிமி தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Israel #Palestine #AhedTamimi
ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்ததாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீன பெண் விடுதலை
Published on

பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தனது ராணுவ அடக்குமுறை மூலம் அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணுவத்தின் அத்துமீறல்களை எதிர்த்தும், அடக்குமுறைகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டின் அருகில் இருந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தனது உறவினரை தாக்குவதை கண்ட 15 வயது அஹெத் தமிமி என்ற பாலஸ்தீன சிறுமி ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீரர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைய, தமிமியும் ராணுவ வீரரை உதைத்து, கன்னத்தில் அறைந்தும் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ராணுவ வீரரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தமிமிக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com