ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பெயர் பதிவு செய்ய இணையதள வசதி

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதள வசதி மூலம் மாணவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பெயர் பதிவு செய்ய இணையதள வசதி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலைவாய்ப்பு துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல், கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.

மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வரவேண்டும்.

பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் (26.7.2017 முதல் 9.8.2017 முடிய) மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளான 26.7.2017 அன்றைய தேதியே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக்குலேசன் வழி பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com