திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருமானூரில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க போர்கால நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட்
Published on

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூரில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க போர்கால நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமானூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் மாவட்ட செயலாளர் உலக நாதன், சிறப்புரை ஆற்றினார். கலியபெருமாள், பரிசுத்தம், கனகராஜ், கல்யாண சுந்தரம், ராஜேந்திரன், மதியழகன், பாலகுரு, கரும்பாயிரம், முருகேசன், சுப்பிரமணியன், மருதமுத்து மற்றும் சி.பி.ஜ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com