சென்னை கன்னியா குருகுலம் வாசுகி பள்ளியை பசுமையாக மாற்றிய ஐ மண் தொண்டு நிறுவனம்

சென்னை கன்னியா குருகுலம் வாசுகி பள்ளியில் இரண்டு மாதங்கள் களப்பணி செய்து பின்னர் 120 மரக்கன்றுகள் நட்டுவைத்து ஐ மண் தொண்டு நிறுவனம் பசுமையாக மாற்றியுள்ளது.
சென்னை கன்னியா குருகுலம் வாசுகி பள்ளியை பசுமையாக மாற்றிய ஐ மண் தொண்டு நிறுவனம்
Published on

ஐ மண் தொண்டு நிறுவனமானது சரியான பசுமை சூழல் இல்லாமல் இருந்த சென்னை கன்னியா குருகுலம்வாசுகி மகளிர் பள்ளியில் கடந்த இரண்டு மாதங்கள் களப்பணி செய்து, பின் 120 மரக்கன்றுகள் நட்டுவைத்து பள்ளியை பசுமையாக மாற்றியுள்ளது.

பள்ளியின் அடிப்படை சூழலுக்கு பெரிதும் உதவிய  ஐ மண் தன்னார்வலர்கள், அப்பள்ளி மாணவியர்கள் பசுமையை  முன்னேறுத்தி, இயற்கையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை நிகழ்ச்சியை நடத்தினர்.

மேலும், இந்த மரம் நடும் விழாவிற்கு திரைப்பட நடிகர் மகாநதி சங்கர் அவர்கள் வருகை தந்து, மரம் நட்டு, இயற்கையின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com