கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலி

கிழக்கு கடற்கரை சாலையில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலி
Published on

சோழிங்கநல்லூர்:

பாலவாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 23) என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இவர் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் நோக்கி திரும்பி வந்தார்.

அப்போது கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுவாமிநாதன் பலியானார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Accident

X

Maalai Malar
www.maalaimalar.com