என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை
- பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்
- செயலி மூலம் வசந்த் கடன் பெற்றதை நண்பர்கள் மூலம் காவல்துறையினர் அறிந்துகொண்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே வசந்த் (22) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை வசந்த் உடைத்து எறிந்துள்ளார். செயலி மூலம் வசந்த் கடன் பெற்றதை நண்பர்கள் மூலம் காவல்துறையினர் அறிந்துகொண்டனர்.
இளைஞர் வசந்தின் உடலை கைப்பற்றி படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






