நெல்லை அருகே குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பெரியசாமி காலனியை சேர்ந்தவர் முப்புடாதி(வயது 33). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது.
நெல்லை அருகே குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பெரியசாமி காலனியை சேர்ந்தவர் முப்புடாதி(வயது 33). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், சமீபத்தில் அவரது மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் முப்புடாதி மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போன நிலையில் நேற்று சொக்கலிங்கபுரம் ஊருக்கு அருகே உள்ள குறிப்பன்குளத்தில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று முப்புடாதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி பிரிந்த ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com