

வருசநாடு:
வருசநாடு அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் குமார் மகள் சுவேதா (வயது15). குமார் நாராயணபுரத்தில் உள்ள ேதாட்டத்தில் தங்கி வேலை செய்து வந்ததால் அவரது உறவினர் முருகேஸ்வரி பொறுப்பில் சுவேதா வளர்ந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுவேதா திடீரென மாயமானார்.
அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் கடமலை க்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதாவை தேடி வரு கின்றனர்.