தேனி: போக்சோ வழக்கில் இளைஞர் கைது

தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அவரை கைது செய்து குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனியை சேர்ந்தவர் வினோத்குமார்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசைவார்த்தை பேசி வந்துள்ளார். மேலும் தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த விசயம் பெற்றோருக்கு தெரிய வரவே வினோத்குமார் மீது தேனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வினோத்குமாரை கைது செய்து குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com