போடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

மதுபழக்கத்திற்கு அடிமையான வாலிபர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.சம்பவத்தன்று வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே டி.வி.கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் போடியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவித்ரா(23).

இந்தநிலையில் மதுபழக்கத்திற்கு அடிமையான கார்த்திக் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு தூங்கசென்ற கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் டாக்டர்கள் கார்த்திக்கை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடிநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com