search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் அருகே குடிநீர் வழங்ககோரி பெண்கள் காலிகுடங்களுடன் மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

    வள்ளியூர் அருகே குடிநீர் வழங்ககோரி பெண்கள் காலிகுடங்களுடன் மறியல்

    • தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் இன்று காலிக்குடங்களுடன் வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 2 நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×