

வடமதுரை:
வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் விலை எப்போதும் நிரந்தமாக இருப்பதில்லை. பல சமயங்களில் விலை அதிகமாகவும், ஒரு சில சமயங்களில் அதிக விலை வீழ்ச்சி அடைந்து குப்பையில்கொட்டி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இது தவிர மார்க்கெட்டுகளுக்கு சென்றால் ஒரு கிலோவுக்கு குறை யாமல் வாங்கினா ல்தான் காய்கறிகள் தருவார்கள். குறைந்த அளவு பயன்படுத்தும் மக்கள் சாலையில் விற்கப்படும் காய்கறிகளையே வாங்கும் நிலை உள்ளது.
இவர்களின் மன நிலையை உணர்ந்து அய்யலூர், வடமதுரை பகுதிகளில் கூறுகட்டி காய்கறிகள் விற்கப்படுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
காய்கறிகளின் விலைக்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை ஒரு கூறு என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், நகர்புறங்களில் வசதி படைத்தவர்கள் அதிக அளவு காய்கறிகளை வாங்கி பிரிட்ஜில் வைத்து பல நாட்கள் உபயோகப்ப டுத்துவார்கள்.
ஆனால் வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களால் இயன்ற காய்கறிகளை குறைந்த அளவு வாங்கி செல்வது வழக்கம். விலை உயர்வு காரணமாக பல சமயங்களில் அவர்கள் வாங்க நினைக்கும் காய்கறிகளை வாங்க முடியாது. இதற்காகத்தான் வியாபாரிகள் காய்கறிகளை கூறுகட்டி விற்பனை செய்து வருகிறோம். தற்போது எங்களை பார்த்து பல ஊர்களிலும் இேதபோல விற்பனையை வியாபாரிகள் செய்து வருகின்றனர்.
அன்றாடம் கூலித்தொழில் செய்யும் மக்கள் தங்கள் வசதிக்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதன்மூலம் கூடுதல் காய்கறிகளை வாங்கி சென்று அதனை வீணாக்கும் நிலையும் தவிர்க்கப்படுகிறது என்றார்.