ரெயில் மோதி பெண் பலி

காலை 9 மணி அளவில், வைகுந்தம் அருகே ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சென்னை மார்க்கம் ரெயில்வே தண்டவாளம் அருகே வசந்தி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ரெயில் தண்டவாளம் அருகே வசந்தி பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம். 
ரெயில் தண்டவாளம் அருகே வசந்தி பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம். 
Published on

சங்ககிரி:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தி (வயது 43). இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில், கடந்த நேற்று மாலை வசந்தி வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில், வைகுந்தம் அருகே ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சென்னை மார்க்கம் ரெயில்வே தண்டவாளம் அருகே வசந்தி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ரெயிலில் அடிப்பட்டு வசந்தி இறந்தது தெரியவந்தது. வசந்தி மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவாராம்.

அவரை கணவன் மற்றும் உறவினர்கள் கண்டுபிடித்து அழைத்து வந்து வீட்டில் வைத்து பராமரித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com