search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு  பெண் தற்கொலை
    X

    காயல்பட்டினத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    • ஜமாலுதீன் காயல்பட்டினம் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மிர்சிதா பானு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் எல். எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 45). இவர் காயல்பட்டினம் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி மிர்ஷிதா பானு (35) கடந்த சில வருடங்களாக தண்டுவடம் மற்றும் நரம்பு தளர்ச்சி நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மிர்ஷிதா பானு நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். நேற்று காலையில் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் ஜமாலுதீன் மற்றும் அவரது உறவினர் அரபாத் ஆகியோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது மிர்சிதா பானு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார். நோய் அவதி காரணமாகவே தான் இந்த முடிவை எடுப்பதாகவும், வேறு யாரும் காரணம் அல்ல என்றும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மிர்சிதா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×