search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    70 அடியை எட்டிய நீர்மட்டம்: மருதாநதி அணையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு
    X

    மருதாநதி அணைப்பகுதியை மதுரைமண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    70 அடியை எட்டிய நீர்மட்டம்: மருதாநதி அணையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு

    • அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதைத் தொடர்ந்து மதுரை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் உள்பட அதிகாரிகள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அணையில் உள்ள ஷட்டர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், அணையின் உறுதித்தன்மை, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அமைந்துள்ளது. இந்த நதியின் மொத்த உயரம் 74 அடியாகும். தாண்டிக்குடி, பண்ணை க்காடு, கடுகுதடி, கோம்பை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இந்த அணை நீர் மூலம் ஆத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்ய ம்பாளையம் பேரூராட்சிகள், சித்தரேவு, அய்யங்கோட்டை, தேவரப்பன்பட்டி ஊராட்சி களுக்கு குடிநீர் வினியோக த்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதைத் தொடர்ந்து மதுரை மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அணையில் உள்ள ஷட்டர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், அணையின் உறுதித்தன்மை, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மஞ்சளாறு வடிநில க்கோட்டை செயற்பொறி யாளர் சுகுமார், உயர் செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×