search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடற்புழு நீக்க மாத்திரையால் வாந்தி மயக்கம்:  ஆத்தூர் அரசு பள்ளி மாணவிகள்   5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை
    X

    குடற்புழு நீக்க மாத்திரையால் வாந்தி மயக்கம்: ஆத்தூர் அரசு பள்ளி மாணவிகள் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

    • தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • அந்த மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி-மயக்கம் உண்டானது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்தி நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்து 480 மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    அந்த மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி-மயக்கம் உண்டானது. இதைத்தொடர்ந்து உடன டியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் மாணவிகள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வாந்தி-மயக்கம் ஏற்பட்ட மொத்தம் 115 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் மாணவிகள் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தோம். இதனால் சில மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம்.

    அதை பார்த்த சில மாணவிகளுக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உள்ளது. மாணவிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. சில மாணவிகள் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். மற்ற மாணவிகளும் குணம் அடைந்து விரைவில் வீடு திரும்பி விடுவார்கள் என்று கூறினார்கள்.

    இதை தொடர்ந்து இன்று காலை வரை 78 பேர் இயல்பு நிலைக்குத் திரும்பி மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினார்கள் தற்

    பொழுது 5 மாணவி கள் மட்டும் மருத்துவ மனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×