search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு
    X

    பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு

    • ராம்கோ பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 4-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, தளவாய்புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி , விருதுநகர் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி, மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்குப் பணியாளர் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறதொடர்பு பணியாளர் முத்துலட்சுமி , விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் கோபு, ஏட்டு பொன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் முதலாம் ஆண்டு மாணவி அனுசுபிக்சா நன்றி கூறினார்.

    Next Story
    ×