search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படிப்பை போல விளையாட்டும் வாழ்க்கைக்கு முக்கியமானது: கலெக்டர் மேகநாதரெட்டி பேச்சு
    X

    படிப்பை போல விளையாட்டும் வாழ்க்கைக்கு முக்கியமானது: கலெக்டர் மேகநாதரெட்டி பேச்சு

    • படிப்பை போல விளையாட்டும் வாழ்க்கைக்கு முக்கியமானது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

    இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 152 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே சதுரங்க போட்டி நடந்தது. அதனை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதா வது:-விருதுநகர் மாவட்டத்தில், சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவி லான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    இப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், அனைத்து பெற்றோர்களும் ஊக்கப்ப டுத்தக்கூடிய ஒரே விளையாட்டு சதுரங்க விளையாட்டு. ஏனென்றால் இந்த விளையாட்டு விளை யாடுவதால் மூளை திறன் அதிகரிக்கும், மூளை நல்ல வளர்ச்சி அடையும், மாணவர்கள் கணித பாடத்தில் நன்றாக சாதிக்க முடியும், மற்ற பாடத்தில் நல்ல கவனம் செலுத்த முடியும். இந்தியாவில் நிறைய பேர் இந்த விளையாட்டில் சாதித்து உள்ளனர். மாணவர்கள் படிப்பிற்கு இணையாக இது போன்ற விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது போன்ற விளையாட்டு மூலம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நல்ல வாழ்க்கைக்கு தேவை யான விஷயங்களை கற்றுக்கொண்டு மாணவர்கள் எளிதில் சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார், உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் உள்பட மாணவ, மாணவி கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×