search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறி தொழிலாளர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம்
    X

    விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்தனர்.

    விசைத்தறி தொழிலாளர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம்

    • விசைத்தறி தொழிலாளர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
    • கஞ்சித்தொட்டி திறப்பு அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதி யில் 400-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி (சம்பளம்) வழங்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் 2021-23 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு 75 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி யும் தோல்வியில் முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அவர்கள் இன்று 9-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏ.ஜ.டி.யு.சி. வட்டார தலைவர்கள் அய்யனார், ராசு தலைமையில் செட்டி யார்பட்டி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு இன்று கஞ்சி தொட்டி திறப்போம் என்று அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தளவாய்புரம் விசைத்தறி தொழிலா ளர்கள் வாழ்வாதார பிரச்சினை என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறை வேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×