search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான முதியவர் பிணமாக மீட்பு
    X

    மாயமான முதியவர் பிணமாக மீட்பு

    • மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(63). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கருப்பசாமி வீட்டிற்கு போன் செய்து திருவண்ணாமலை ரோட்டில் உள்ள செங்கல் சூளை அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவருடைய உடல் சவக்கிடங்கில் உள்ளதாகவும், அது கருப்பசாமியா? என்பதை உறுதிப்படுத்துமாறும் தகவல் அளித்தனர்.

    உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அது கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கலா ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×