ஐவர் பூப்பந்து போட்டி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கைப்பந்து, ஐவர் பூப்பந்து போட்டி நடந்தது.
ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் முதல் இடத்தை பிடித்த இந்து மேல்நிலைப்பள்ளி அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் முதல் இடத்தை பிடித்த இந்து மேல்நிலைப்பள்ளி அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.
Published on

வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான ஜவர் பூப்பந்து போட்டி மற்றும் விருதுநகர் மாவட்ட கைபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. 

ஜவர் பூப்பந்து போட்டியில் 17மாவட்டகளும், வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் 11அணிகள் கலந்து கொண்டன.  இரு போட்டிகளுக்கு பள்ளிகளின் செயலர் ஹரிஹரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளிகளின் தலைவர் ஹரிஹரசுப்பிர மணியன், குன்னூர் அரசு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், வத்திராயிருப்பு டாக்டர் ஆல்வின் முன்னிலை வகித்தனர். தலைமை யாசிரியர் ராஜசேகரன் வரவேற்றார்.  

கைப்பந்து முதல்போட்டியை தி.மு.க. ஒன்றியச் செயலாளர் முனியாண்டி தொடங்கி வைத்தார். ஐவர் பூப்பந்தாட்ட முதல்போட்டியை பள்ளிகளின் செயலர் ஹரிஹரசுப்பிரமணியன். தலைவர் ஹரிஹரசுப்பிர மணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

நிதிக்கமிட்டி தலைவர் சுந்தரராஜன், வத்திராயிருப்பு துணை வட்டாட்சியர் காளிராஜன், மாவட்ட உடற்கல்வி ஆய் வாளர் ஜெயக்குமார் இன்ஸ் பெக்டர் பாலாஜி, மாவட்ட கைப்பந்து கழக துணைத்தலைவர் சீனிவாசகம், சென்னை ஐ.சி.ஏப். முருகேசன் ஆகியோர் பேசினர். 

மாவட்ட கைப்பந்துகழக தலைவர் துரைசிங் நிறைவு போட்டியில் பரிசு வழங்கினார். ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் இந்து மேல்நிலைப்பள்ளி ஏ பிரிவு மாணவர்கள் முதல்பரிசை பெற்றனர். 

ஈரோடு மாவட் டம் சவக்கட்டுபாளையம் பள்ளி மாணவர்கள் 2ம் இடத்தையும், ஏ.ஆர்.சி. மயிலாடுதுறை பள்ளி மாணவர்கள் 3ம் இடத்தையும், இந்து மேல் நிலைப்பள்ளி பி பிரிவு மாணவர்கள் 4ம் இடத்தையும், மதுரை திரு.வி.க. பள்ளி மாணவர்கள் 5ம் இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் ரமணி, ராமசுந்தர் நன்றி கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com