search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிகர் சங்க கூட்டமைப்பு கூட்டம்
    X

    வணிகர் சங்க கூட்டமைப்பு கூட்டம்

    • வணிகர் சங்க கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
    • கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் விருதுநகர் மேற்கு மாவட்ட கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மே 5-ந் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது. ராஜபாளையம்-சத்திரப்பட்டி ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதை மின்மயமாக்கல் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களை விரைந்து சேர்க்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் வணிகர்களுக்கு இடையூறு இல்லாமல் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். இடைத்தேர்தல் ஆதரவு குறித்து ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் போர்க்கொடி தூக்குவதை ஏற்க முடியாது. புகையிலையை உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்க முடியாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வணிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு இந்த முடிவை அறிவிக்கும் வரை வணிகர்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

    புகையிலை விற்பனை தொடர்பாக வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர் வணிகர் சங்க நிர்வாகிகள் பச்சி வன்னியராஜ், கோமதி சங்கர் குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×