என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

    செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் பூவேஸ் ராஜமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மின் நுகர்வோர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் கிராம மக்களிடம் உதவி செயற்பொறியாளர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அதிகாரியிடம் குற்றம் சாட்டினர்.

    லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தெரிவித்தார்.

    Next Story
    ×