

வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்திலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் பக்தர்கள் வீடு திரும்பினர்.