search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய விருதுநகர் கலெக்டர்
    X

    மாணவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் புத்தகங்கள் வழங்கினார்.

    பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய விருதுநகர் கலெக்டர்

    • பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விருதுநகர் கலெக்டர் புத்தகம் வழங்கினார்.
    • வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நல விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கலெக்டர் ஜெயசீலன் 100 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறுகையில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். புத்தகம் ஒரு மனிதனை மேன்மையாக்குகிறது. புத்தகம் படிப்பதன் மூலம் அறிவு மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் சிங்கராஜ், முதல்வர் வெங்கடேசுவரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×