search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி-பணம் கொள்ளை
    X

    கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி-பணம் கொள்ளை

    • விருதுநகர் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சிறிய கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மேலும் ஒரு கோவிலில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-

    விருதுநகர் அருகே உள்ள வெள்ளூர்-புதுப்பட்டி ரோட்டில் மாகாளி பட்டி என்ற இடத்தில் தும்மம்மாள் அம்மன் கோவில் உள்ளது. கிராம கோவிலான இங்கு அதே பகுதியை சேர்ந்த சிவக் குமார் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத் தன்று இரவு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அலுவலக அறைக்கு சென்ற கொள் ளையர்கள் அம்மனின் தங்க தாலி, வெள்ளி நாகர் சிலை, உண்டியல் பணம் 3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மறு நாள் கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு தாலி, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி சுந்தரராஜன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×