search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்க்கும் முகாமில் தவித்த பொதுமக்கள்
    X

    குறைதீர்க்கும் முகாமில் தவித்த பொதுமக்கள்

    • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறை மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பார்கள்.

    குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரே நேரடியாக மனுக்களை பெறுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.இதன்காரணமாக அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பொதுமக்களின் கூட்டம அலைமோதும்.

    அதன்படி திங்கட்கிழமையான இன்று மனு அளிக்க காலை முதலே முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக் கானோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் இன்று காலை அரசு அலுவல் காரணமாக கலெக்டர் வெளியே சென்று விட்டார். ஆனால் பொதுமக்களிடம் மனுக்களை பெற எந்தவித மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    கலெக்டர் இல்லாதபோது அதற்கு அடுத்த தகுதியில் உள்ள அதிகாரிகள் முகாமை நடத்தி மனுக்களை பெறுவது வழக்கம். ஆனால் இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    Next Story
    ×