அ.தி.மு.க. நிர்வாகி-டிரைவருக்கு கத்திக்குத்து

அ.தி.மு.க. நிர்வாகி-டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க. நிர்வாகி-டிரைவருக்கு கத்திக்குத்து
Published on

விருதுநகர்

விருதுநகர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மலிங்கம் (வயது52). இவரது மனைவி முத்து லட்சுமி. யூனியன் துணைத்தலைவராக உள்ளார்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை விருதுநகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் செய்து வந்தார். அதன்படி நேற்று இரவு நோட்டீஸ் வழங்குவதற்காக சென்னல்குடி, கோட்டூர் பகுதிகளுக்கு சென்றார்.

கோட்டூரில் உள்ள அதிமுக மாணவரணி நிர்வாகி அலுவலகத்தில் தர்மலிங்கம் இருந்த போது யூனியன் கவுன்சிலர் சென்னல்குடி மாரியப்ப னின் மகன் செந்தூர்பாண்டி அங்கு வந்தார். நிர்வாகி களை நியமனம் செய்வது தொடர்பாக தர்ம லிங்கத்துக்கும், செந்தூர் பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் தர்மலிங்கத்திற்கு கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை காரை ஓட்ட முயன்ற கார் டிரைவர் கடம்பன் குளத்தை சேர்ந்த மகேஷ்கண்ணன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. 2 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்கா ரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com