என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நர்சு-மாணவன் உள்பட 3 பேர் மாயம்
- விருதுநகரில் நர்சு-மாணவன் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டான்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி யேசுதாசன் (வயது47). இவரது மகள் மேகலா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று பணிக்கு சென்ற மேகலா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் சூரியசா மிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் மாதவன் (12). இவர் அல்லம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு வெளியே சென்ற மாதவன் பின்னர் பள்ளிக்கு திரும்பவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை.
இதுகுறித்து தலைமை யாசிரியர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ஆர்.வி.ஆர். நகரை சேர்ந்தவர் மலர்கொடி. இவரது மகள் சந்தியா (19). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சந்தியா திடீரென மாயமானார். பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்