search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நர்சு-மாணவன் உள்பட 3 பேர் மாயம்
    X

    நர்சு-மாணவன் உள்பட 3 பேர் மாயம்

    • விருதுநகரில் நர்சு-மாணவன் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டான்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி யேசுதாசன் (வயது47). இவரது மகள் மேகலா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று பணிக்கு சென்ற மேகலா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம் சூரியசா மிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் மாதவன் (12). இவர் அல்லம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு வெளியே சென்ற மாதவன் பின்னர் பள்ளிக்கு திரும்பவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை.

    இதுகுறித்து தலைமை யாசிரியர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ஆர்.வி.ஆர். நகரை சேர்ந்தவர் மலர்கொடி. இவரது மகள் சந்தியா (19). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சந்தியா திடீரென மாயமானார். பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×