வெம்பக்கோட்டையில் விரைவில் தொடங்க உள்ள 2-ம் கட்ட அகழாய்வு பணி

வெம்பக்கோட்டையில் விரைவில் தொடங்க உள்ள 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட உள்ளது. அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
வெம்பக்கோட்டையில் விரைவில் தொடங்க உள்ள 2-ம் கட்ட அகழாய்வு பணி
Published on

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த ஆண்டு முதலாம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.

அகழாய்வில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தம் மூலம் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பதக்கம், சுடுமண்ணாலான தொங்கட்டான், பகடைக் காய், அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு, அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 2-ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீண்டும் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

முதல் கட்ட அகழாய்வின் முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும், அவைகள் வெளி நாடுகளில் வணிகம் செய்ததற்கான சான்றாக பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டறியப் பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியை 2ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரி வித்துள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் வெளி நாடுகளுடன் கொண்டுள்ள வணிக தொடர்பை அறிய முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com