search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைமா கல்வி நிறுவனங்களின் 27-வது ஆண்டு விழா
    X

    வைமா கல்வி நிறுவனங்களின் 27-வது ஆண்டு விழா

    • வைமா கல்வி நிறுவனங்களின் 27-வது ஆண்டு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வைமா கல்வி நிறுவனங்களான கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைமா வித்யாலயா, பிரசார்தா பாடசாலா, வைமா கிட்ஸ் பள்ளிகளின் 27-வது ஆண்டு விழா பி.எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. நகர் மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும், சாத்தூர் சவுத் சைடு மெட்ரிக்குலேசன் பள்ளி நிறுவனர் சீனிவாசன், தங்கமயில் ஜுவல்லரி முதன்மை செயல் அதிகாரி விஸ்வநாராயன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க செயலாளர் கவிஞர் லட்சுமி காந்தன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். லட்சுமி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜாகுணசீலன், லட்சுமி என்ஜினீயரிங் மேனேஜிங் டைரக்டர் ரவிசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் வைமாதிருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி வரவேற்றார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பானுப்பிரியா, வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பக லட்சுமி, பிரசார்தா பாடசாலா பள்ளி முதல்வர் செண்பககனி, வைமா கிட்ஸ் பள்ளியின் ஆசிரியை பாக்கியலட்சுமி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். கேசா டி மிர் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    Next Story
    ×