இலவச பயிற்சி

விருதுநகர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி 7-ந்தேதி தொடங்குகிறது.
பயிற்சி
பயிற்சி
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு  குழுமத்தால் சார்பு ஆய்வாளர் காலி பணிஇடங்களை உள்ளடக்கி மொத்தம் 444 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

கல்வித்தகுதி  பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும்.  வயது உச்சவரம்பு 30 (வயது தளர்வு உண்டு). ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022. இது குறித்து மேலும் விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த  தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக 7.4.2022 முதல் நேரடி பயிற்சி நடைபெற இருக்கிறது. மேற்காணும் தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் https://t.me/vnrstudycircle  என்ற டெலிகிராம் மூல மாகவோ, onlineclassvnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com