search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுகுடியில் மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளிய கிராம மக்கள்
    X

    குளத்தில் மீன்கள் பிடித்த வாலிபர்கள்.

    சிறுகுடியில் மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளிய கிராம மக்கள்

    • நத்தம் அருகே சிறுகுடி கருங்குட்டு கோவில் சிறுகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ந்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கருங்குட்டு கோவில் சிறுகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையினால் இந்த குளம் நிரம்பியது. தற்போது குளத்தில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்ப ட்டது. இது தொடர்பாக அ றிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து இன்று காலை கிராம மக்கள் சிறுகுடி கண்மாய்க்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்குள்ள கருங்குட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்பிறகு மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து பூசாரிப ட்டி, அர ண்மனைபுதூர், சமுத்திராப்பட்டி, நல்ல கண்டம், ஒடுகம்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம ங்களை சேர்ந்த மக்கள் குளத்தில் இறங்கி போட்டி ப்போட்டு மீன்களை பிடித்தனர். ஊத்தா கூடை, வலை மூலம் மீன்கள் பிடிக்க ப்பட்டது. கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. தங்களுக்கு கிடைத்த மீன்களை கிராம மக்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    Next Story
    ×