என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- மணல் கடத்தலை தடுத்ததால் ஏற்பட்ட விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- பொன்னேரி வட்டத் தலைவர் சசி ஆனந்தம், கிராம நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னேரி:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் விஏஒ லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணல் கடத்தலை தடுத்து புகார் அளித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலையை கண்டித்து பொன்னேரி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி வட்டத் தலைவர் சசி ஆனந்தம், கிராம நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் தேவராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Next Story






