கேமராக்களை பயன்படுத்தி சாராய வேட்டை

7 ஆயிரம் லிட்டர்சேவ சாராய ஊரலைக் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கேமராக்களை பயன்படுத்தி சாராய வேட்டை
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் கலால் இன்ஸ்பெக்டர் பேபி, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழநிமுத்து, அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையாக கொண்ட குழுவினர் சாராய வேட்டை நடத்தினர். அல்லேரி, வாழைப்பந்தல், பீஞ்ச மந்தை, ஜார்தா ன்கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட மலை பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்டுபிடித்தனர்.

அப்போது, அல்லேரி மலைப்பகுதியில் காட்டுக்கு நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 5ஆயிரம் லிட்டர் சாராய ஊரலையும் ஜார்தான்கொல்லை பகுதியில் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல், குருமலையில் 1000 என மொத்தம் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊரலைக் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பயன்ப டுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தாதவாறு நொறுக்கி தள்ளினர்.

இதுகுறித்து அணைக்கட்டு, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com