என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொல்லை
    X

    மாணவிக்கு பாலியல் தொல்லை

    • போக்சோவில் டியூசன் மாஸ்டர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மீர் பஹார் அலி (வயது 53). என்பவரிடம் மாணவி டியூஷன் படித்து வந்தார்.

    இந்த நிலையில் டியூஷனுக்கு வந்த மாணவியிடம் மீர் பஹார் அலி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வாசுகி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மீர் பஹார் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    Next Story
    ×