search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்
    X

    எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மண்டல செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

    எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

    • வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    அ.தி.மு.க., வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி, பகுதி செயலாளர்கள்‌ நாகு, குப்புசாமி, அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, பாலச்சந்தர், வி.எல்.ராஜன், அண்ணாமலை, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் எஸ். குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×